×

இருசக்கர வாகனம் திருடியவர் கைது

 

திருப்பூர், ஜூலை 28: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பிரசாந்த் (24). பனியன் தொழிலாளி. இவர், தனது இருசக்கர வாகனத்தை பெருமாநல்லூர் அருகே அய்யம்பாளையம் பனியன் நிறுவனம் முன் நிறுத்தினார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதையடுத்து பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பெருமாநல்லூர் போலீசார் 4 வழிச்சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர், பெருமாநல்லூர் காளிபாளையம் பிரிவு சபரி நகரைச் சேர்ந்த காளிப்பன் மகன் துரை (47) என்பதும், அவர் ஓட்டி வந்த வாகனம் திருடப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துரையை கைது செய்தனர்.

The post இருசக்கர வாகனம் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Prasanth ,Kopichettipalayam Goundampalayam, Erode district ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து...